ராஜீவ் கொலை புதிதாக விசாரிக்க கோரிய மனு: மத்திய அரசு பதிலளிக்க ஹைகோர்ட் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த குமரன் பத்மநாபனை விசாரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று சென்னையை சேர்ந்த ஜெபமணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக தாம் சிபிஐ-க்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இம்மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications