குடிசையில் புகுந்து சிறுமியை கடத்தி, கற்பழித்து, கொலை செய்த காமுகர்கள்: மும்பையில் பயங்கரம்
மும்பை: மும்பையில், தாயாருடன் நடை பாதை குடிசையில் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி, மர்ம நபர்களால் தூக்கிச் செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மும்பையின் ஓர்லி பகுதியில் நடைபாதை குடிசையில், வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் தனது 8 வய்து மகளுடன் வாழ்ந்து வந்தார். வழக்கம் போல் நேற்று காலை பணிக்கு செல்வதற்காக அதிகாலையில் தூங்கி எழுந்த அப்பெண் அருகில் தனது மகள் இல்லாததால் திடுக்கிட்டார்.
அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில், அருகாமையில் உள்ள இடத்தில் அச்சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்று, அச்சிறுமியை மருத்துவமனிக்கு தூக்கிச் சென்றார் அத்தாய்.
ஆனால், அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் கற்பழிக்கப்பட்டு, பின் கழுத்து நெரிக்கப்பட்டதில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் சிலரை கைது செய்துள்ளனர். விசாரணை முடிவடைந்த பின்னரே உண்மையான கொலையாளி யார் என்பது தெரிய வரும்.
குடிசைக்குள் தாயருகே தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர்கள் தூக்கிச் சென்று கற்பழித்து கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications