ரூ80,000 கோடி ’தெலுங்கானா பேக்கேஜ்’..ஆந்திர முதல்வருடன் ஆலோசனை நடத்த சோனியா மறுப்பு!

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை. இதற்காக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்காமல் அப்பகுதிக்கு ரூ80 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யம் திட்டம் ஒன்றுக்கான வரைவையும் எடுத்துச் சென்றிருந்தாராம்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேச அனுமதி கேட்டு காத்திருந்தார். ஆனால் சோனியாவோ கிரண்குமார் ரெட்டியை சந்திக்க மறுத்துவிட்டதுடன் காங்கிரஸின் காரியக் கமிட்டியே இதில் இறுதி முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமது தூதுவராக ஆந்திர பிரதேச மாநிலப் பொறுப்பாளர் திக்விஜயசிங்கை கிரண்குமார் தங்கியிருந்த ஆந்திர பவனுக்கு அனுப்பி வைத்தார்.
ஆந்திர பவனில் சுமார் இரண்டரை மணி நேரம் கிரண்குமார் ரெட்டியுடம் திக்விஜய்சிங் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுத்திருக்கிறது என்பதை அவர் விவரித்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அப்போது ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கிரண்குமாரிடம் திக்விஜய்சிங் கூறியிருக்கிறாராம்.
இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் கிரண்குமார் ரெட்டி ஹைதராபாத் திரும்பியதாக கூறப்படுகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications