சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை
சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செல்போன் மூலம் விபரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை அன்று, சென்னை வணிக வளாகத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செல்பேசி அழைப்புகள் பற்றிய விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது.
சாப்ட்வேர் எஞ்ஜினியராக வேலை பார்த்த சண்முகம் (வயது 23) கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 3.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சண்முகம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரது செல்போனில் இருந்த அனைத்து தகவல்களையும், அழித்துவிட்டுதான் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
எனவே, சண்முகம் தற்கொலை செய்யும் முன்பாக அவர் யார் யாருடன் பேசினார் என்பதைப் பற்றி அறிய அவரது செல்போன் எண் பற்றிய தகவல்களை அந்த செல்போன் நிறுவனத்திடம் இருந்து போலீசார் கேட்டுள்ளனர். அந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications