காடுவெட்டி குரு உட்பட 20 பேர் மீதான தே.பா. சட்டம் மத்திய அரசால் ரத்து: டாக்டர் ராமதாஸ்

இது தொடர்பாக அவர் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மரக்காணத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட கலவரத்திற்கு நீதி கேட்டு போராடிய என்னையும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரையும் பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்தது. இவர்களில் ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை, அவர்கள் செய்யாத குற்றத்திற்காக குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகிய தடுப்புக்காவல் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
ஒரே மாதத்தில் 122 பேர் தடுப்புக் காவலில்..
ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 122 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்படாத அடக்குமுறையாகும். பா.ம.க.வினரை பழிவாங்க வேண்டும்; பா.ம.க.வை முடக்க வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்துடன் பா.ம.க.வினரை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்தது.
உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு
இவர்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த மத்திய உள்துறை அமைச்சகம், ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதற்கான 11 விதிகளில் ஒன்று கூட பா.ம.க.வினர் விவகாரத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் 14 (1) பிரிவின்படி வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 20 பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சட்டப்படியான நடைமுறைகளுக்கு பிறகு விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பா.ம.க.வினர் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்று தமிழக அரசு கூறிவந்த பொய்ப்புகாரும் இதன்மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications