இத்தாலியில் உணவளித்த தாத்தாவை கடித்து குதறி கொன்ற 3 புலிகள்

Subscribe to Oneindia Tamil

Man killed by three caged tigers in Italy
ரோம்: இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன.

இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் இருந்த பினெரோலோ வனவிலங்கு காப்பகம் பொருளாதார நெருக்கடியால் 2009ம் ஆண்டு மூடப்பட்டது. ஆயினும் காப்பகத்தில் இருந்த விலங்குகள் அனைத்தும் அதே இடத்தில் வைத்து பராமரிக்கப் பட்டு வருகின்றன.

தற்போது அங்கு நிறைய புலிகள் உள்ளன. இந்தக் காப்பகத்தில் 72 வயது நபர் ஒருவர் புலிகளுக்கு உணவளிக்கும் பணியைச் செய்து வருகிறார். சம்பவத்தன்று, வழக்கம் போல் உணவளிக்கச் சென்ற அவரை கூண்டுக்குள் இருந்த 3 புலிகள் திடீரென தாக்கின.

புலிகள், முதியவரின் கழுத்தைக் கடித்துக் குதறுவதைப் பார்த்து அதிர்ந்து போன அவரின் மனைவி உடனடியாக, மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் இறந்து போன முதியவரின் சடலத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+