ஜார்க்கண்ட் புதிய அரசு அமைப்பதில் சிக்கல்.. காங்., ஜேஎம்எம் பேச்சில் இழுபறி
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது. இழுபறியும் நீடிக்கிறது.
இந்த இழுபறி இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவிகளைப் பங்கு போட்டுக் கொள்வதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்த முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன்தான் பதவியேற்கவுள்ளார். அவர் தனது கட்சி சார்பில் அமைச்சராவோர் மற்றும் எந்தெந்த துறை தேவை என்ற பட்டியலை இன்னும் இறுதி செய்யாமல் உள்ளார். இதன் காரணமாக ஹேமந்த் சோரன் மற்றும் சோனியா காந்தி சந்திப்பும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 13 பேர் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு 5 பேர் உள்ளனர். இந்தக் கட்சியும் இக்கூட்டணியை ஆதரிப்பதால் லாலு கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவி தரவுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன்பு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பாஜகவும் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தன. ஆனால் திடீரென இந்தக் கூட்டணி முறிந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் குடிரயரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டது. தற்போது காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முயற்சித்து வருகிறது.
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications