இளவரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் - திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி வந்திருந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இளவரசன் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நீதி விசாரணை தேவை. அந்த நீதிபதி சாதிசார்பற்றவராக பணியில் உள்ளவராக இருத்தல் வேண்டும். காரணம், இளவரசனின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பகத்தனமான தகவல் கிடைத்துள்ளது.
எங்களுக்கு தமிழக அரசு மீது நம்பிக்கை உள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. நேர்மையான விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications