மேக்சிஸ் நிறுவன அனுமதியை ரத்து செய்ய கோரி புதுவழக்கு..சு.சுவாமி முடிவு!!

சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு கட்டாயப்படுத்தி விற்கச் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் வழக்கு. மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகள் விற்கப்பட்டதன் மூலம் ரூ547 கோடியை சன் டைரக்ட்டில் மேக்சிஸ் முதலீடு செய்தது என்கிறது சிபிஐ. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றப் படிகள் ஏறியவர் சுப்பிரமணியன் சுவாமி.
இந்நிலையில் ட்விட்டரில் இன்று பதிவிட்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் மலேசிய ஒத்துழைக்க மறுத்து வருகிறது. இதனால் மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து அந்நிறுவனத்தின் முதலீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புதிய வழக்கு தொடர இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
விடாது கருப்புன்னு சொல்வாங்களே அது இதுவா?












Click it and Unblock the Notifications