ரூபாயின் மதிப்பு சரிவால் சந்தோஷப்படும் இரண்டே பேர்!
டெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் இரண்டே இரண்டு துறைகள் மட்டும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
1. ஏற்றுமதியாளர்கள்
2. சுற்றுலாத்துறை
காரணம், ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களது ஏற்றுமதிப் பொருளுக்கான விலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இருந்ததை விட சுமார் 20 சதவீதம் அதிகமாகிவிட்டது. அதாவது, ஒரு பொருளை 2 மாதங்களுக்கு முன் ரூ. 50க்கு ஏற்றுமதி செய்தவர்களுக்கு இன்று அதே பொருளுக்கு ரூ. 62 விலை கிடைக்க ஆரம்பித்துள்ளது.

சுற்றுலாத்துறையினரின் மகிழ்ச்சிக்குக் காரணம்:
சுற்றுலாத்துறையினரின் மகிழ்ச்சிக்குக் காரணம், ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர ஆரம்பித்துள்ளது.

வசதி...வசதி:
முன்பு 10,000 டாலர் கொண்டு வந்தால் இந்திய மதிப்பில் அது ரூ. 5 லட்சமாக இருந்தது. இப்போது அதே 10,000 டாலர், இந்தியாவுக்கு வந்தவுடன் ரூ. 6.2 லட்சமாகிவிட்டது. இதனால் இன்னும் வசதியான ஹோட்டலில் தங்கலாம், வசதியான காரில் சுற்றிப் பார்க்கலாம், இரண்டு மாதத்துக்கு முன்பு இருந்ததை விட அதிகமாகவே பர்சேஸ் செய்யலாம்.

எகிப்து, துருக்கிக்கு நோ:
வழக்கமாக எகிப்து, துருக்கி மாதிரியான நாடுகளுக்குச் செல்வோர் கூட அங்கு நிலவும் அரசியல் பிரச்சனைகள், உள்நாட்டு போர்- மோதல்களால் தெற்காசியா பக்கம் பார்வையைத் திருப்ப ஆரம்பித்துள்ளனர்.

குறைந்த டாலரில் நிறைந்த வசதி:
அதிலும், குறிப்பாக ரூபாயின் மதிப்பு சரிவால் குறைந்த டாலரில் நிறைந்த வசதியோடு சுற்றிப் பார்க்கும் இடமாக இந்தியா மாறிவிட்டதால், இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஹங்கேரி..
கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இப்போது இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை சடாரென 15 சதவீதம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைன், போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவா, கேரளா செல்ல ஆர்வம்:
அதே போல குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வர விரும்பி அட்வான்ஸ் புக்கிங் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கோவா, கேரளா செல்ல ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஒருவருக்கு நஷ்டம்.. இன்னொருவருக்கு லாபம்!
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications