ஆந்திராவில் இருந்து உத்தர்காண்ட் சென்ற 81 பேரின் கதி என்ன?
ஹைதராபாத்:உத்தர்காண்ட் மாநிலத்துக்கு சென்ற 81 யாத்ரீகர்களின் நிலை என்னவென தெரியவில்லை என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து மொத்தம் 2,785 பேர் உத்தர்காண்ட் யாத்திரைக்காக சென்றிருந்தனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 81 பேர் கதி என்னவென்று தெரியவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ரங்காரெட்டி மாவட்டத்தில் இருந்து 33 பேரும் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து 14 பேரும் ஹைதராபாத்தில் இருந்து 8 பேரும் சித்தூர், விசாகப்பட்டினத்தில் இருந்து தலா 5 பேர், குண்டூர், ஒய்.எஸ்.ஆர். கடப்பா, குண்டூர் மாவட்டங்களில் இருந்து தலா 4 பேர், அனந்தபுர், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இருந்து தலா 3 பேர், நிஜாமாபாத் மாவட்டத்தில் இருந்து 2 பேர் ஆகியோர் நிலைபற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இவர்கள் தொடர்பான தகவல்களை ஆந்திர மாநில் அரசு தமது இணையதளத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. எந்த ஒரு தகவலும் கிடைக்காத இந்த 81 பேரின் குடும்பங்களும் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
உத்தர்காண்ட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் தகவலின்படி 4 ஆயிரம் பயணிகள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். ஆனால் அரசு சார்பற்ற நிறுவனமான ஸ்பேர் இந்தியவின் தகவலின்படி 11,600 பேர் காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications