For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயற்சி- 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் 28வது பிரிவின் செய்தித் தொடர்பாளர் பென்தார்கர் கூறுகையில், குப்வாரா பகுதியில் உள்ள உஸ்தவ் சோதனைச் சாவடி அருகில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் காட்டுப் பகுதியில் இருந்து ஆயுதங்களுடன் 10 தீவிரவாதிகள் இந்தியப் பகுதிக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அப் பகுதிக்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 தீவிரவாதிகள் பலியாகினர்.

எஞ்சியவர்கள் அனைவரும் காட்டுக்குள் பதுங்கியப்டி பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றார்.

English summary
Army gunned down five terrorists on Tuesday and foiled yet another major infiltration bid to sneak into Kashmir from across the Line of Control in Kupwara district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X