7வது நாளாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் இளவரசன் உடல்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

Subscribe to Oneindia Tamil

Ilavarasan body kept in GH for 7th day
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இன்று 7வது நாளாக வைக்கப்பட்டுள்ளது இளவரசனின் உடல். இளவரசன் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரும் வழக்கு நிலுவையில் இருப்பதால் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளவரசன் கடந்த 4-ந் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இளவரசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பல மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் இளவரசன் உடலை பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று 7வது நாளாக இளவரசன் உடல் மருத்துவமனையிலேயே இருக்கிறது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+