திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம்… படம் பிடித்து மிரட்டிய டாக்டர் கைது
மீரட்: இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி அனுபவித்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய டாக்டரை மீரட் நகர போலீசார் கைது செய்தனர்
மீரட் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கஜேந்திர சிநேகர் என்ற அந்த டாக்டர் நிவாடி பகுதியில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். அங்கு கடந்த 2008ம் ஆண்டு சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணுடன் நட்பு ரீதியாக பழகியுள்ளார்.
நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை அனுபவித்துள்ளார் அந்த டாக்டர். அதனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டார்.
நாளடைவில் டாக்டரின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவே, அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். திருமணத்திற்கு மறுத்துவிட்ட டாக்டர், தான் எடுத்த வீடியோவை எம்.எம்.எஸ் அனுப்பியும், இணையதளத்தில் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், டாக்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications