சென்னை... விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் விடிய விடிய லேசானதும், மிதமானதுமாக மழை கொட்டித் தீர்த்தது. இரவு முழுவதும் அழுத வானத்தால் நகரமே ஈரமாகிப்போய்க் கிடககிறது.
நேற்று மழை பெய்யும் என்று முன்னரே வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் மெதுவாக தொடங்கியது மழை.
இரவு முழுவதும் விடாமல் அழுது தீர்த்தது இந்த மழை. நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் பல புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

காலையிலும் விடாமல் தூறிக் கொண்டிருக்கும் இந்த வெப்பச் சலன மழையால் சென்னை நகரமே ஈரமாகியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.
மழை இன்றும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications