ராமேஸ்வரம்: 3ம் வகுப்பு மாணவியை அடித்து காயப்படுத்திய ஆசிரியை கைது
ராமநாதபுரம்: கையெழுத்து சரியில்லை என்று கூறி 3ம் வகுப்பு மாணவியின் முதுகில் அடித்து காயப்படுத்தியுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர். அந்த மாணவியின் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் ஹரிணி. இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் கையெழுத்து அழகாக இல்லை என்று 4 வரி நோட்டில் தினமும் ஆங்கில வார்த்தைகள் சிலவற்றை வீட்டில் எழுதி வருமாறு ஹரிணியிடம் வகுப்பு ஆசிரியை சுமதி கூறியிருக்கிறார்.ஆனால், .ஹரிணி சரி வர எழுதி வராததால் அவரது முதுகில் மூங்கில் கம்பால் ஆசிரியை அடித்துள்ளாராம்.
இதில், ஹரிணியின் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதை வீட்டில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று ஆசிரியை மிரட்டியதால் ஹரினியும் தனது பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி ஹரிணி, தனது முதுகு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அவரது பெற்றோர் உடனே ஹரினியை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் வலி குறையாமல் ஹரினி அழுது கொண்டே இருந்துள்ளார். இதனால், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹரினியின் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து ராமேஸ்வரம் போலீஸார், ஆசிரியை சுமதி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications