மது குடித்ததற்காக திட்டிய மாமியார்.. எலி மருந்தை வாங்கிக் குடித்து 'அமரரான' மருமகன்!
நாமக்கல்: நாமக்கல் அருகே மது அருந்தி விட்டு வந்ததற்காக மாமியார் திட்டியதால் வேதனை அடைந்த மருமகன், உடனே எலி மருந்தை வாங்கிக் குடித்து தற்கொலை செய்து கொண்டு அமரரானார்.
வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான பெரியசாமி. இவர் தனது மாமனார் வீட்டுக்குப் போயுள்ளார். போவதற்கு முன்பு டாஸ்மாக் கடைக்குள் புகுந்து லைட்டாக குவார்ட்டரை வாங்கி வாயில் விட்டுக் கொண்டு மாமனார் வீட்டை அடைந்தார்.
மது போதையில் வந்த மருமகனைப் பார்த்து கொதிப்படைந்தார் மாமியார் லட்சுமி. இப்படியா குடிச்சுட்டு வர்றது என்று கோபத்துடன் கண்டித்தார். மாமியார் திட்டிட்டாரே என்று சோகமாகிப் போன பெரியசாமி அதே வேகத்தில் வெளியேறினார். மருந்துக் கடைக்குப் போய் எலி சாக வைக்கும் மருந்தை வாங்கினார். அதை வாயில் போட்டுக் கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பினார். அங்கு மயங்கி விழுந்தார்.
உடனே அவரை பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பெரியசாமி.
இந்த பெரியசாமியால் எத்தனை பேருக்கு கஷ்டம் பாருங்கள்...!