ஃபுகுஷிமா சுனாமி தாக்குதல்: நிலத்தடி நீரில் அணுக் கதிர் வீச்சு பாதிப்பு அதிகரிப்பு

ஜப்பான், ஃபுகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையம் , 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த சுனாமி தாக்குதலில் கடும் பாதிப்புகளைச் சந்தித்தது. இதனால் அதன் அருகாமையில் வசித்து வந்த ஆயிரணக்கணக்கான மக்கள் அணுக்கதிர்வீச்சுக்குப் பயந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
இந்நிலையில், அந்நகரில் சமீபத்தில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது. அதில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகளவில் அணுக் கதிர் வீச்சு பாதிப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது இரண்டாண்டுகளுக்கு முன்பு உண்டான சுனாமியின் காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, அரசு விதிப்படி சீசியம்-134 அணுக் கதிர் வீச்சின் அளவு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 60 பெக்கரல்ஸ் அலகு ஆகவும், சீசியம்-137 அணுக் கதிர் வீச்சின் அளவு 90 பெக்கரல்ஸ் அலகு ஆகவும் இருந்தால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், இவை இப்போது முறையே 9,000 பெக்கரல்ஸ், 18,000 பெக்கரல்ஸ் என்ற அபாயகரமான அளவில் உள்ளது.
இந்த அபாயகரமான கதிர்வீச்சால், அப்பகுதியில் உள்ளோருக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. இது குறித்து ஃபுகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையத்தை நிர்வகிக்கும் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, ‘நிலத்தடி நீரில் இந்த அளவுக்கு அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அணு மின் நிலையத்தின் எப்பகுதியிலிருந்து கதிர் வீச்சு கசிகிறது என்பது தெரியவில்லை. அது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று கடந்த ஜூன் மாதம், ஸ்ட்ரோனியம்-90 என்ற அணுக் கதிர் வீச்சின் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 2011-ம் ஆண்டு டிசம்பரில் பதவியை ராஜிநாமா செய்த, ஃபுகுஷிமா அணுமின் நிலைய முன்னாள் தலைவர் மாசோ யோஷிதா (58), தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இத்தகவலைத் தெரிவித்த டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவன செய்தித் தொடர்பாளர் யோஷிமி ஹிடோசுகி, ‘அவரது புற்றுநோய்க்கு அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர் வீச்சு காரணமல்ல' என தெரிவித்துள்ள போதிலும், மாசோவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
மாசோ யோஷிதா, தலைவராக பதவியில் இருந்த காலக்கட்டத்தில் தான், அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதும், கதிர்வீச்சு பரவும் அபாயத்தை தடுக்க அவர் தலைமை தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications