மும்பை நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
மும்பை: கனமழையால் மும்பை அன்டாப் மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று இரவு விடாமல் பெய்த மழையால், அன்டாப் மலையில் வியாழக்கிழமை காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிலையில் மீட்புப் பணிகளின் போது மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் இடத்தை காலி செய்யவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications