கோவையில் தூக்கில் தொங்கிய துணை நடிகர்!
கோவை: கோவையில், துணை நடிகர் சுரேஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, பீளமேடு பி.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). டிவி சீரியலிலும், சில படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.
கடந்த 30ஆம் தேதியிலிருந்து திடீரென காணாமல் போனார் சுரேஷ். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து நேற்று (10ஆம் தேதி) துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பக்கத்து வீட்டினர் பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது.
'சுரேஷ், இரண்டு பெண்களை திருமணம் செய்திருந்தார். ஆனால், இருவருமே சுரேஷிடம் இருந்து விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். இதனால் தனிமையில் வசித்த வந்த அவர் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம்' என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.