இளவரசன் மறு பிரேதப் பரிசோதனை ... அறிக்கை உயர்நீதிமன்றத்தி்ல் தாக்கல்
இளவரசன் உடல் கடந்த 4ம் தேதி தர்மபுரி அரசுக் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவைக் கொண்டு 2வது பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு டெல்லியிலிருந்து வந்து 2வது பிரேதப் பரிசோதனையை செய்தது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு இளவரசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2வது பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் குழு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை நீதிபதிகள் தனபலாலன், சி.டி. செல்வம் ஆகியோர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.