பீகாரில் இன்றும் மதிய உணவு சாப்பிட்ட 15 குழந்தைகள் வாந்தி, மயக்கம்!
பாட்னா: பீகாரில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக மதிய உணவு உட்கொண்ட 15 குழந்தைகள் வாந்தி, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல்லி விழுந்த உணவை உட்கொண்டதாலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலம் சாப்ரா அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்தனர். பூச்சி மருந்து கலந்த உணவை உட்கொண்டதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் மதிய உணவு உட்கொண்ட 15 குழந்தைகள் வாந்தி, மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரின் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பீகார் மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications