விதவைப் பெண்ணை கற்பழித்த மாமனாரும், மைத்துனரும் தலைமறைவு: போலீசார் தேடல்
சிர்சா: வீட்டில் தனியாக இருந்த 35 வயது விதவைப் பெண்ணைக் கற்பழித்த மாமனாரையும், மைத்துனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சிர்சா மாவட்டத்தில் உள்ள அலிமுகம்மது கிராமத்தில் வசித்து வருபவர் மாலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற 35 வயது விதவைப் பெண். கணவரின் மறைவுக்குப் பின் தனியாக வசித்து வரும் மாலாவை, அவரது கணவரின் தந்தையும், சகோதரனும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஜுலை 14 அன்று நடந்த இக்கொடூரச் சம்பவம் குறித்து , 16ம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மாலா. இதன் மூலம் விஷயம் வெளியில் தெரிந்து விட்டதை அறிந்த குற்றவாளிகள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
மாலாவின் புகாரின் அடிப்படையில் முதலில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டது. அதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications