Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல் உறுப்புகள் சோதனையில், தற்கொலைக்கு முன் இளவரசன் மது அருந்தியது நிரூபணம்

Subscribe to Oneindia Tamil

Viscera test confirms dalit youth consumed alcohol before death
தர்மபுரி: ரயில் முன் பாய்ந்து தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மது அருந்தியது, அவரது உறுப்புகளை சோதனை செய்ததில் நிரூபணம் ஆகியுள்ளதாக இளவரசன் வழக்கை விசாரணை செய்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்டதன் மூலம், தர்மபுரியில் பெரும் கலவரம் உருவாக காரணமாக இருந்த திவ்யா-இளவரசன் ஜோடி இம்மாத தொடக்கத்தில் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜூலை 5ம் தேதி, தர்மபுரியில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டார் இளவரசன்.

அவரது உடலுக்கு அருகே, சில மதுபாட்டில்கள் கிடந்தன. மேலும், அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட கடித்ததில் இருப்பது அவரது கையெழுத்துத் தான் என்பது உறுதியான நிலையில் அவரது மரணம் தற்கொலை தான் என நிரூபணமானது.

இந்நிலையில், தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை, என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. இது குறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நண்பர்களோடு இணைந்து மது அருந்தும் பழக்கம் இளவரசனுக்கு இருந்தது உறுதியானது.

மேலும், இளவரசனது உடல் உறுப்புக்களை ஆய்வு செய்த நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில் மரணமடைவதற்கு முன் இளவரசன் மது அருந்தியிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+