ரமலான் நோன்பு: இனி இப்தார் விருந்தில் பிட்ஸா, பர்கர் மற்றும் கேக்கும் கிடைக்கும்..!
லக்னோ: பொதுவாக இப்தார் விருந்தில் பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் கஞ்சி போன்ரவை இடம் பெறும். ஆனால், லக்னோவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இம்முறை விருந்தில் புதிதாக பீட்ஸா, பர்கர் மற்றும் கேக்குகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
சென்ற வாரம் ரமலான் நோன்பு துவங்கியது. பகல் வேளையில் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், நோன்பு முடிக்கும் வேளையில் பொதுவாக பருப்பு, கஞ்சி போன்ற உணவௌகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் புதுமையாக லக்னோவில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று இவ்வருடம் நோன்பு விடுபவர்களுக்கு வித்தியாசமான விருந்தளிக்க முடிவு செய்துள்ளது.

புதுமையான இப்தார்...
லக்னோவில் உள்ளது ஹூசைனாபாத் தொண்டு நிறுவனம். நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு வித்தியாசமான விருந்தளிக்க திட்டமிட்ட இந்நிறுவனம், இப்தார் விருந்தில் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளது.

இப்தார் விருந்தில் பீட்ஸா...
அதன் படி, வித்தியாசமான சுவைகள் கொண்ட பீட்சா, பர்கர், கேக் போன்றவைகளை இம்முறை இப்தார் விருந்தில் பரிமாற இருப்பதாக இத்தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதியுதவி அதிகரிப்பு...
மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு விருந்திற்கான நிதி உதவி ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டதால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ மசூதிகள்...
பீட்ஸா, பர்கர் மற்றும் கேக் விருந்து லக்னோவில் உள்ள 12 மசூதிகளிலும் அனைத்து நோன்பு பிரிவினருக்கும் ஒரே நாளிலோ அல்லது ஒவ்வொரு மசூதியிலும் ஒவ்வொரு நாளாகவோ அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வித்தியாச இப்தார் விருந்து...
இந்த வித்தியாசமான இப்தார் விருந்தில் ஒவ்வொரு மசூதியில் இருந்தும் மொத்தம் 1000 முதல் 1500 பேர் இடம் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications