ரமலான் நோன்பு: இனி இப்தார் விருந்தில் பிட்ஸா, பர்கர் மற்றும் கேக்கும் கிடைக்கும்..!
லக்னோ: பொதுவாக இப்தார் விருந்தில் பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் கஞ்சி போன்ரவை இடம் பெறும். ஆனால், லக்னோவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இம்முறை விருந்தில் புதிதாக பீட்ஸா, பர்கர் மற்றும் கேக்குகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது.
சென்ற வாரம் ரமலான் நோன்பு துவங்கியது. பகல் வேளையில் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள், நோன்பு முடிக்கும் வேளையில் பொதுவாக பருப்பு, கஞ்சி போன்ற உணவௌகளை எடுத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் புதுமையாக லக்னோவில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று இவ்வருடம் நோன்பு விடுபவர்களுக்கு வித்தியாசமான விருந்தளிக்க முடிவு செய்துள்ளது.

புதுமையான இப்தார்...
லக்னோவில் உள்ளது ஹூசைனாபாத் தொண்டு நிறுவனம். நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு வித்தியாசமான விருந்தளிக்க திட்டமிட்ட இந்நிறுவனம், இப்தார் விருந்தில் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளது.

இப்தார் விருந்தில் பீட்ஸா...
அதன் படி, வித்தியாசமான சுவைகள் கொண்ட பீட்சா, பர்கர், கேக் போன்றவைகளை இம்முறை இப்தார் விருந்தில் பரிமாற இருப்பதாக இத்தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதியுதவி அதிகரிப்பு...
மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு விருந்திற்கான நிதி உதவி ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டதால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ மசூதிகள்...
பீட்ஸா, பர்கர் மற்றும் கேக் விருந்து லக்னோவில் உள்ள 12 மசூதிகளிலும் அனைத்து நோன்பு பிரிவினருக்கும் ஒரே நாளிலோ அல்லது ஒவ்வொரு மசூதியிலும் ஒவ்வொரு நாளாகவோ அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

வித்தியாச இப்தார் விருந்து...
இந்த வித்தியாசமான இப்தார் விருந்தில் ஒவ்வொரு மசூதியில் இருந்தும் மொத்தம் 1000 முதல் 1500 பேர் இடம் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications