லீவு போட்டு விட்டு எஸ்கேப் ஆன 400 ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ்கள்
டெல்லி: லீவு போட்டு விட்டு மீண்டும் பணிக்கே வராமல் போகும் ஏர் ஹோஸ்டஸ்களின் எண்ணிக்கை ஏர் இந்தியாவில் அதிகரி்த்து வருகிறதாம்.
இதுவரை 400 ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ்கள் இப்படிக் காணாமல் போயுள்ளனராம்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத் திறமையின்மை, சரியான சம்பளம் கிடைக்காதது, தனியார் நிறுவனங்கள் காட்டி விரிக்கும் ஆசை வலையில் வீ்ழ்வது என இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.

மகாராஜாவின் மகாராணிகள்
மகாராஜா என்றுஅழைக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் ஏர் ஹோஸ்டஸ்களாகப் பணிபுரிய ஒரு காலத்தில் பெண்களிடையே நல்ல மோகம் இருந்தது. மகாராஜாவின் மகாராணிகளாக அவர்கள் பெருமையுடன் வலம் வந்த காலம் அது.

இப்படி ஆயிருச்சே
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. ஏர் இந்தியாவில் பணியாற்ற பெண்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாம். இருக்கிற பெண்களும் லீவு போட்டு விட்டு ஓடிப் போய் விடுகின்றனராம்

2 வருட லீவில் 400 பேர் எஸ்கேப்
ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ்கள் 400 பேர் 2 வருட லீவுக்கு விண்ணப்பித்து இதுவரை மீண்டும் பணிக்கே திரும்பவி்ல்லையாம்.

3600 ஏர் ஹோஸ்டஸ்கள்
ஏர் இந்தியாவில் பணியாற்றும் ஏர் ஹோஸ்டஸ்களின் எண்ணிக்கை 3600 ஆகும். அதில் இதுவரை லீவு போட்டு விட்டுத் திரும்பாதோர் எண்ணிக்கைதான் இந்த 400 பேர்.

தப்பி ஓடியவர்கள்
தற்போது இந்த 400 பேரையும் தப்பி ஓடியவர்களாக ஏர் இந்தியா அறிவி்த்துள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் முறைப்படி டிஸ்மிஸ் செய்யப்படுவார்களாம்.

டெல்லியில் மட்டும் 300 பேர்
இந்த 400 பேரில் டெல்லியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 300 பேராம்.












Click it and Unblock the Notifications