''அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா''.... கையை இறக்காமல் செம கும்பிடு போட்ட சேந்தமங்கலம் சாந்தி!!
ஏற்காடு: தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு போட்ட கும்பிடைப் பார்த்து அதிமுகவினரே பொறாமைப் பட்டுப் போய் விட்டனர். கும்பிடு என்றால் அப்படி ஒரு கும்பிடு.. முதல்வரின் காரைப் பார்த்தது முதல் திரும்பிப் போகும் வரை கையை கீழே இறக்கவே இல்லை சா3ந்தி.
சாந்தி போட்ட கும்பிட்டைப் பார்த்த அதிமுகவினரே பொறாமைப்பட்டுப் போய் விட்டனர் என்றால் பார்த்துக்குங்க..
ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ பெருமாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா வந்திருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது.
அத்தனை அமைச்சர்களும் அட்டேன்ஷன்
முதல்வர் வருகையைத் தொடர்ந்து அத்தனை அமைச்சர்களும் ஒருவர் தப்பாமல் ஆஜராகி வழக்கம் போல வரிசையாக நின்று கொண்டனர்.
சாந்தியும் வந்தார்
அவர்களுடன் சேந்தமங்கலம் தேமுதிக எம்எல்ஏ சாந்தியும் வந்து நின்றிருந்தார்.
சிரித்த முகம்...
அதிமுகவினருடன் சகஜமாக பேசியபடியும், சிரித்தபடியும் புன்னகை பூத்த முகமாக காணப்பட்டார் சாந்தி. சாவு வீட்டுக்கு வந்தவர் போலவே அவர் தெரியவில்லை.
பாம் .. பாம்... அம்மா கார் வருது...
இந்த சமயத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கார் வந்தது. சைரன் ஒலி கேட்டதுமே சாந்தி சட்டென்று மாறினார். டக்கென உடம்பை வளைத்தார்.. கைகளை அப்படியே தூக்கி கும்பிடுக்கு மாறினார்.
போகும் வரை
முதல்வரின் கார் சைரன் சத்தம் கேட்டபோது கூப்பிய கரங்களுடன் புது கெட்டப்புக்கு மாறிய சாந்தி, முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் செல்லும் வரை கையை இறக்கவே இல்லை.
அடேங்கப்பா... இதுதான் சாந்தியின் தோற்றப் பொலிவைப் பார்த்து அதிமுகவினர் உதிர்த்த வார்த்தைகள்...!