சென்னை முழுவதும் விட்டு விட்டு வெளுத்து வாங்கிய மழை- வெள்ளக்காடானது நகரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையப் பாதித்தது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.

சென்னையில் சமீப காலத்தில் இப்படி அடை மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிற்பகலுக்கு மேல் மழை ஆரம்பித்தது. இந்த நிமிடம் வரை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. விட்டு விட்டு கன மழையாக பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.

Heavy rain slams Chennai city

நகரின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. புறநகர்ப் பகுதிகளில் கனத்த மழையாக இது பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், அலுவலகங்கள் விட்டு வருவோர்தான் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்க மழை வரப் போகுது, என்று அலட்சியமாக குடை எடுத்துச் செல்லாதவர்கள் பெரும் பாடு பட்டு வீடுகளை வந்தடைந்து வருகின்றனர்.

இந்த மழை இரவு முழுவதும் நீடிக்கும் என்று தெரிகிறது. இந்த திடீர் தொடர் மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+