190 மெ.வா மின்சாரத்துக்காக மக்கள் உயிரை பணயம் வைப்பதா? வைகோ கேள்வி

கூடங்குளம் அணுஉலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அணுஉலை எதிர்ப்பாளர்கள் பலவழிகளில் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
அணுஉலை எதிர்ப்பாளர்கள் இன்று சென்னையில் பாத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது வைகோ கூறியதாவது:
கூடங்குளத்தில் 600 மெ.வா மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் 75 மெ.வா கூடங்குளம் அணுஉலையிலே செலவிடப்பட்டு விடும். மீதமுள்ள 525 மெ.வா மின்சாரத்தில் 45% அதாதவது 236 மெ.வா மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படும். அதிலும் மின்சாரத்தை டிரான்ஸ்மிட் செய்யும் போது ஏற்படும் இழப்பிற்குப் பிறகு வெறும் 190 மெ.வா மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கும். எனவே கூடங்குளம் மின்சாரம் தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யும் என்பது மாயை.
அணுஉலைக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் கடந்த 2 வருடங்களாக போராடி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான மக்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இதுபோல யார்மீதும் வழக்கு போடப்படவில்லை.
ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பின்னர் பல நாடுகள் பாடம் கற்றுக் கொண்டு விட்டன. ஆனால் நாம்தான் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனவே அணுஉலையை செயல்பட அனுமதிப்பது தென்தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு என்றைக்கும் ஆபத்துதான்.
பல ஆபத்துக்களை கடந்த வெறும் 190 மெ.வா மின்சாரம் மட்டும் பெறுவதில் என்ன லாபம் என்று வைகோ கேள்வி எழுப்பினார். மேலும் கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கடலில் கலக்கப்பட்டால் கடல் வாழ் உயரினங்களும் பவளப்பாறைகளும் அழியும். மேலும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டப்போகிறார்கள் என்று மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications