பீகார் மதிய உணவில் விஷம்: பள்ளி குழந்தைகள் இறப்பிற்கு நீதி கேட்டு போராடிய 90 பேர் மீது எப்.ஐ.ஆர்
பாட்னா: பீகாரில் மதிய உணவு உட்கொண்ட பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டுப் போராடிய பொதுமக்கள் 90 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு மதிய உணவு உட்கொண்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 23 பள்ளி குழந்தைகள் மரணமடைந்தனர். நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகிறது. தடய அறிவியல் வல்லுனர்கள் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய், உருளைக் கிழங்கு, சோயாபீன்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வறிக்கை வந்தபின் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிய உணவின்போது அதனுடன் வழங்கப்பட்ட காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட துணை உணவை சாப்பிட்ட பின்னர் 55லிருந்து 65 குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 23 பேர் உயிரிழந்ததாகவும் சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவரான சந்திரசேகர சிங் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் குழந்தைகள் மரணத்தினால் கொதிப்படைந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராடினர். ராஷ்டிரிய ஜனதா தளம், பாஜக அழைப்பு விடுத்திருந்த பந்த் வன்முறையில் முடிந்தது. பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 90 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யாமல் நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு போடுவதால் அங்கு பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications