நடிகைகள் பணத்திற்குப் படிகிறவர்களா..?- ட்வீட்டர் கருத்துக்கு குஷ்பு, சின்மயி கண்டனம்
சென்னை: ட்வீட்டரில் நடிகைகள் பற்றி அவதூறாக விமர்சித்துள்ள ஒருவரின் கருத்துக்கு நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், ட்வீட்டரில் ஒருவர், ‘நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக' கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து குஷ்பு தனது ட்வீட்டரில் அளித்துள்ள பதிலடி...
விபச்சார தரகர்கள்...
நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவர்தான் இது போல் பேச முடியும்.
வருந்தும் பெற்றோர்...
இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
ஆண்களின் ஆதரவு...
பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
சின்மயி கண்டனம்...
ட்வீட்டர் கருத்துக்கு , பின்னணி பாடகியான சின்மயியும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.