ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்பு - 65 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: ஈராக்கின் பாக்தாத் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 65 பேர் பலியானார்கள்.
இந்த மாதத்தில் மட்டும் ஈராக்கில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 520க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நேற்று மாலையில் பாக்தாத் மற்றும் மடய்ன் என்ற இரு இடங்களில் தாக்குதல் நடந்தது. மொத்தம் 12 கார்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறின. மேலும் சாலையோரமும் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது. 190 பேர் இதில் காயமடைந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 65 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் நோன்பு முடிவடைந்த நேரம் பார்த்து குண்டுகள் வெடித்துள்ளன.--












Click it and Unblock the Notifications