மும்பையில் வீடு புகுந்து பாஜக தலைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
மும்பை: மும்பையில் பாஜக தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கிடிபாடா பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் பாட்டீல்(55). பாஜக தலைவர். அவர் அம்மாநிலத்தில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வசந்தின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்தனர். வெளியே சென்றிருந்த அவரது மனைவி வீட்டுக்கு வந்ததும் வசந்த் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் வசந்தை அருகில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications