சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்
டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற லோக்சபா எதிர்கட்சித்தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளார். அதற்கான யாத்திரை தொடக்கவிழா இன்று நடைபெற உள்ளது. ம.பியின் விதிஷா தொகுதி எம்.பியான சுஷ்மா ஸ்வராஜ் இந்த விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் உஜ்ஜயினிக்கு இன்று காலை புறப்பட்டார். ஆனால் விமானத்தில் இயந்திர கேளாறு ஏற்படவே விமானம் அவசரம் அவசரமாக ஜெய்பூரில் தரையிறக்கப்பட்டது.
இது பற்றி டுவிட்டரில் பகிர்ந்துள்ள சுஸ்மா, "காலையில் உஜ்ஜயினி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் ஜெய்பூரில் தரையிறங்கினோம். நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஜெய்பூரில் இருந்து மற்றொரு விமானம் மூலம் இந்தூர் வந்த சுஷ்மா, பின்னர் கார் மூலம் உஜ்ஜயினியை சென்றடைந்தார். ம.பி.முதல்வரின் விழாவில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications