நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தடையை மீறி விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் சமீபத்தில் மரணமடைந்த இயக்குநர் மணிவண்ணன் படத்தை விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த ரங்கநாதபுரத்தில் திறந்து வைப்பதற்காக இன்று மதியம் சீமான் வந்தார்.

விழுப்புரத்தில் தற்போது, 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை மீறி விழுப்புரம் மாவட்டத்திற்கு சீமான் சென்றதால் முன் எச்சரிக்கையாக திண்டிவனம் அருகே போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் வந்த மேலும் 20 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மரணத்தைத் தொடர்ந்து விழுப்புரத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications