ரம்ஜான் நோன்பு: ஷார்ஜாவில் 2,000 பேர் பங்கேற்ற ‘கின்னஸ்’ இப்தார் விருந்து
ஷார்ஜா: சார்ஜாவில், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இணைந்து ரம்ஜான் நோன்பின், இப்தார் விருந்து சாப்பிட்டார்கள். கின்னஸ் முயற்சிக்காக மேற்கொள்ளப்பட்டது இந்த விருந்து என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்தார் என்பது ரமலான் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும் நிகழ்வு ஆகும். பொதுவாக நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி இவ்வுணவை உண்பது வழக்கம்.
நோன்பு நாட்களில், இது மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்னர் நடைபெறும். நோன்பை முடிப்பதற்கு முதல் உணவாக பேரீச்சம்பழத்தை உண்பார்கள்.

கூட்டு விருந்து ஏற்பாடு...
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த இப்தார் விருந்து, ஷார்ஜா நகராட்சி, ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில் துறை போன்றவை சேர்ந்து உள்ளூர் போலீஸ் துணையுடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
600 மீட்டர் மேஜை...
விருந்தில், சுமார் 600 மீட்டர் நீள மேஜையின் மீது, பிரியாணி, பல்வகை கனிகள், பழச்சாறுகள் ஆகியவை பரிமாறப்பட்டன.
எதிர்பார்த்ததை விட அதிகம்...
சனிக்கிழமை மாலை 5.30 மணியில் இருந்தே எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் திரண்டனர். இதனால், மேஜையில் இடம் பிடிக்க போட்டாப் போட்டி ஏற்பட்டது.
கண் கொள்ளாக் காட்சி...
பெண்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். தன் மகனோடு விருந்தில் கலந்து கொண்ட முக்கத்தஸ் குஷி என்ற பெண் இது குறித்து கூறியதாவது, ‘நாடு, இனம் ஆகியவற்றை கடந்து ஆயிரக் கணக்கானவர்கள் இந்த விருந்தில் பங்கேற்றது கண் கொள்ளா காட்சியாக இருந்தது' என்றார்.
கின்னஸ் முயற்சி...
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் விருந்து, கின்னஸீல் இடம் பெறுமா என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்து விடும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications