பிஜபூர் அருகே பஸ்-கார் பயங்கர மோதல்: 10 வயது சிறுமி உள்பட 18 பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

பிஜபூர்: கர்நாடகாவில் தனியார் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற 18 பக்தர்கள் பலியாகினர்.

மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் குரு பூர்ணிமாவை முன்னிட்டு கர்நாடகாவுக்கு எஸ்யூவி காரில் ஆன்மீக சுற்றுலா வந்தனர். அவர்கள் கனக்பூர், குல்பர்கா ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பினர். நேற்று இரவு 2.45 மணிக்கு பிஜபூர் அருகே உள்ள சிக்கா சிந்தகி கிராமத்தில் அவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பிஜபூரில் இருந்து குல்பர்கா நோக்கி சென்ற தனியார் பேருந்து அவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.

18 from Sangli killed as bus rams SUV near Bijapur

இதில் காரில் இருந்த 10 வயது சிறுமி, 3 பெண்கள் உள்பட 18 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களில் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் கார் டிரைவர் தேஜப்பா பாண்டுரங் ஷிண்டே(28), நந்தாபாய் சிவாஜி சவான்(45), அசோக் பண்டிட் காம்ப்ளி(40), மஜேந்திர சரகர் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சந்திரகாந்த் அப்பாஜி ஷிண்டே(35) மற்றும் ததுபா மாருதி சரகர் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து சங்லி எஸ்.பி. திலீப் சாவந்த் கூறுகையில்,

இந்த கோர விபத்து குறித்து பிஜபூர் எஸ்பியிடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் போலீஸ் குழு மற்றும் ஆம்புலன்ஸை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+