இஷ்ரத் என்கவுன்ட்டர் வழக்கு: 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோருகிறது சிபிஐ
டெல்லி: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போலி என்கவுன்ட்டர் வழக்கில் 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ கால அவகாசம் கோர திட்டமிட்டிருக்கிறது.
2004ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். போலீசுக்கு ஐபி கொடுத்த தகவலின் பேரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் அவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ அண்மையில் முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடந்தது என்கவுன்ட்டர் அல்ல. போலி என்கவுன்ட்டர்தான். சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் கடத்தி அடைத்து வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அந்தக் குற்றப் பத்திரிகையில் கூறியதுடன் இந்த போலி என்கவுன்ட்டருக்கு காரணமாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளின் பெயரையும் அதில் தெரிவித்திருந்தது.
மேலும் அந்த முதலாவது குற்றப்பத்திரிகையில் ஐபி எனப்படும் மத்திய உளவு அமைப்பின் குஜராத் அதிகாரியான ராஜேந்திர குமாருக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ராஜேந்திரகுமாரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டியது இருக்கிறது என்பது சிபிஐ தரப்பு கருத்து. இதனால் சிபிஐக்கும் ஐபிக்கும் இடையே பெரும் மோதல் உருவாகி உள்ளது. ராஜேந்திரகுமார் இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதன் பின்னரிடம் அவரிடம் விரிவான விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இதனால் 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோர சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டெல்லி புறப்பட்டார் செந்தில்பாலாஜி.. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜர்! கூடவே ராஜீவ் காந்தி -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications