இஷ்ரத் என்கவுன்ட்டர் வழக்கு: 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோருகிறது சிபிஐ
டெல்லி: குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போலி என்கவுன்ட்டர் வழக்கில் 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ கால அவகாசம் கோர திட்டமிட்டிருக்கிறது.
2004ஆம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில் மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். போலீசுக்கு ஐபி கொடுத்த தகவலின் பேரில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் அவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் சிபிஐ அண்மையில் முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் நடந்தது என்கவுன்ட்டர் அல்ல. போலி என்கவுன்ட்டர்தான். சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரும் கடத்தி அடைத்து வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அந்தக் குற்றப் பத்திரிகையில் கூறியதுடன் இந்த போலி என்கவுன்ட்டருக்கு காரணமாக குஜராத் மாநில போலீஸ் அதிகாரிகளின் பெயரையும் அதில் தெரிவித்திருந்தது.
மேலும் அந்த முதலாவது குற்றப்பத்திரிகையில் ஐபி எனப்படும் மத்திய உளவு அமைப்பின் குஜராத் அதிகாரியான ராஜேந்திர குமாருக்கும் இதில் தொடர்பிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ராஜேந்திரகுமாரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டியது இருக்கிறது என்பது சிபிஐ தரப்பு கருத்து. இதனால் சிபிஐக்கும் ஐபிக்கும் இடையே பெரும் மோதல் உருவாகி உள்ளது. ராஜேந்திரகுமார் இம்மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அதன் பின்னரிடம் அவரிடம் விரிவான விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இதனால் 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோர சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications