மோடிக்கு விசா தரவே கூடாது..திமுக, காங் உட்பட 12 கட்சிகளின் 65 எம்.பிக்கள் ஒபாமாவுக்கு கடிதம்!!

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா தர மறுத்துவிட்டது. தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கோ, அமெரிக்க எம்.பி.க்களிடம் எப்படியும் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று லாபி செய்தார்.
ஆனால் 12 கட்சிகளைச் சேர்ந்த 65 இந்திய எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மோடிக்கு விசா தரக்கூடாது என்று ஒரு பேக்ஸ் அனுப்பினர். இதில் 25 ராஜ்யசபா எம்.பி.க்களும் 40 லோக்சபா எம்.பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதேபோன்ற ஒரு பேக்ஸ் கடந்த ஆண்டு நவம்பர் 26, டிசம்பர் 5-ந் தேதியன்றும் ஒபாமாவுக்கு இதே 65 எம்.பிக்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அந்த கொள்கையை தொடர்ந்தும் அமெரிக்கா கடை பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இக்கடிதத்தில் திமுகவின் கே.பி. ராமலிங்கம், காங்கிரஸின் ராமசுப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், ஐக்கிய ஜனதா தளத்தில் சபீர் அலி, அலி அன்வர் அன்சாரி உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
ராஜ்யசபாவின் சுயேட்சை எம்.பி.யான முகமது ஆதீப்பின் முன் முயற்சியிலேயே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு செக் வைக்கும் வகையில்தான் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது












Click it and Unblock the Notifications