பிடிவாரண்ட் எதிரொலி: ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil

கடந்த 2008ம் ஆண்டு, ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது சீமான் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் முதன்மை நீதிமன்ற நீதிபதி சதாசிவம், சீமானுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, இன்று காலை, ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார்.












Click it and Unblock the Notifications