மாணவர்கள் மோதல்: பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 10 பேர் சஸ்பெண்ட்!
சென்னை: இரு கல்லூரி மாணவர்களிடையேயான மோதலை அடுத்து வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையிலுள்ள பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும், பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதிக் கொண்டனர். இந்த மோதலில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் பயணிகளின் செல்போனையும் பிடிங்கிச் சென்றனர்.
கல்லூரி தொடங்கிய ஒரு சில தினங்களிலேயே மாணவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. மாணவர்களிடையேயான மோதல் சில சமயம் வன்முறையாக மாறுவதால் பொதுமக்களும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
10 பேர் சஸ்பெண்ட்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தனர். ஆனால், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுவருவதால் தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகமும் வன்முறையில் ஈடுபட்ட 10 மாணவர்களையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
டிஸ்மிஸ் ஆவார்களா?
இந்த மாணவர்களில் 3 பேர் முதலாமாண்டு படித்து வருகிறார்கள். இவர்கள் தொடர்ந்து இதே கல்லூரியில் படித்தால், மேலும் சக மாணவர்களோடு கோஷ்டி சேர்த்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் அவர்களை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யவும் கல்லூரி நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து கல்லூரி விசாரணை கமிட்டி இன்று கூடி முடிவெடுக்கவுள்ளது..
டிரைவரின் கழுத்தில் கத்தி
கடந்தவாரம் பாரிமுனையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற 57 எப் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் பாட்டு பாடியபடி சென்றனர்.
தங்கசாலை புதிய பஸ் நிலையம் வந்தபோது மேலும் 10 மாணவர்கள் ஏறினர். பேசின்பிரிட்ஜ் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது, இரு தரப்பு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தானியங்கி கதவு மூடப்பட்டு இருந்ததால் ஒரு தரப்பு மாணவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். இதனால் பயணிகள் அலறினர். டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றார். மற்றொரு தரப்பு மாணவர்கள் டிரைவர் கழுத்தில் கத்தியை வைத்து, நிறுத்தும்படி மிரட்டினர். அவர் பஸ்சை நிறுத்தியதும் சாலையில் இருதரப்பு மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஏழுகிணறு, யானைக்கவுனி போலீசார் வந்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்..
மாணவர்களின் மோதல் தொடர்கதையாகிவருவதால் இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications