தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: 17 ஜெகன் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கான போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதில் திடீர் திருப்பமாக தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் என். மனோகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications