மண்ணில் விளையாடியதற்காக... 6 வயது மகளை ‘கரண்டியால்’ அடித்துக் கொன்ற தாய்

Subscribe to Oneindia Tamil

ஹைதரபாத்: ஹைதராபாத்தில் கோபத்தில் தாய் சமையல் செய்யும் கரண்டியால் 6 வயது மகளை அடித்ததில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.

ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சரன்நகரை சேர்ந்த கவுசியா பேகம், இவரது மகள் பர்ஹா பேகம். 6 வயது பர்ஹா, நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டிற்கு வெளியே கொட்டப்பட்டிருந்த மணலில் விளையாடச் சென்றிருக்கிறாள்.

மகள் மண்ணில் விளையாடுவதைக் கண்டு ஆத்திரமுற்ற கவுசியா, மகளை வீட்டிற்குள் அழைத்திருக்கிறார்.ஆனால், வர மறுத்திருக்கிறார் பர்ஹா, இதனால் ஆத்திரமடைந்த கவுசியா மகளைக் கரண்டியால் அடித்திருக்கிறார்.

சுற்றி இருந்தவர்கள் தடுத்தும், விடாமல் அடித்திருக்கிறார் கவுசியா. வலி தாங்க முடியாமல் கதறிய பர்ஹா ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட பர்ஹாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ஏற்கனவே, உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த பர்ஹாவை, கவுசியா தொடர்ந்து அடித்ததே அச்சிறுமியின் மரணத்திற்குக் காரணம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+