வடக்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகம் மூடல்: கேள்விக்குறியாகியுள்ள இந்திய மாணவர்களின் எதிர்காலம்
வெர்ஜீனியா: அமெரிக்காவில் உள்ள வடக்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தை உடனே மூட உத்தரவிட்டப்பட்டுள்ளதால் அங்கு படிக்கும் ஏராளமான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள வடக்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தை உடனே மூடுமாறு வெர்ஜீனியா மாநில உயர் கல்வி கவுன்சில் கடந்த 16ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள் அதிலும் இந்திய மாணவர்கள் அதிக அளவில் படித்து வந்தனர். தற்போது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மாணவர்கள், நிதி ஆவணங்கள் குறித்து தகவல்களை அளிக்குமாறு அந்த பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட பல்கலைக்கழக வேந்தரால் வெர்ஜீனியா பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் நடத்தப்பட்டது.
தற்போது மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications