For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு- ராக்கெட் தாக்குதல்

By Mathi
Google Oneindia Tamil News

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் கனரக ஆயுதங்களைக் கொன்டு பாகிஸ்தான் படையினர் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். ராக்கெட் லாஞ்சர் மூலம் ராக்கெட் குன்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் லடாக் பிராந்தியத்தில் சீனா தொடர்ந்து அத்துமீறி ஊடுருவல் மேற்கொன்டு வருகிறது. மற்றொரு எல்லையான பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு ஏதுவாக அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

அத்துடன் தீவிரவாதிகள் 10 பேர் கொன்ட குழுவாக பிரிந்து எல்லையில் தாக்குதல் நடத்தியபடியே ஊடுருவும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் பகுதியில் கனமான தாக்குதலை நடத்தியது. ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு ராக்கெட் குன்டுகளை இந்திய நிலைகள் மீது வீசியது.

இந்தியத் தரப்பிலும் இருந்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் திருப்பி தாக்குதல் நடத்தப்பட்டது.

English summary
Pakistani troops violated ceasefire by targeting Indian posts along the Line of Control in Poonch district with RPGs and heavy machine guns on Saturday morning leading to heavy exchange of fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X