அனுமதியில்லாமல் இயங்கும் பட்டாசு ஆலைகளை சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: அனுமதியில்லாமல் இயங்கும் பட்டாசு ஆலைகளை மூடி சீல்வைக்க விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து வக்கீல் ஆனந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிவகாசி நடுமுதலிப்பட்டி, "ஓம்சக்தி' பட்டாசு ஆலையில், செப்டம்பர் 5ல் ஏற்பட்ட தீ விபத்தில், 38 பேர் பலியானதாக, அரசு தெரிவிக்கிறது. மேலும் பலர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. நிரந்தரமாக, 70 பேர் ஊனமடைந்துள்ளனர். விருதுநகர் கலெக்டர், எஸ்.பி., மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வாளரை, சம்பவத்திற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில், விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு தலா, 30 லட்சம், ஊனமடைந்தவர்களுக்கு, 7 லட்சம், காயமடைந்தவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ராஜேஸ்வரன், நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
ஆட்சியர் தலைமையில் காவல்துறை, வருவாய்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, தீயணைப்பு துறையும் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் குறிப்பிட்டனர்.
அத்துடன் அனுமதியில்லாத பட்டாசு ஆலைகளுக்கு உடனே சீல் வைக்கவும், ஆய்வு அறிக்கையை வருகிற ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications