மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 12 பேர் கைது… கொலை முயற்சி வழக்கு
சென்னை: மின்சார ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நேற்று அரக்கோணத்திற்கு சென்ற மின்சார ரெயிலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்துக் கல்லூரி ரெயில் நிலையத்தில் நின்றபோது ஒரு கும்பல் மாணவர்களை தாக்கியது. பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் தாக்கியதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மோதலை தடுக்க சென்ற பயணி ஒருவரும் காயம் அடைந்தார்.
சினிமாவை மிஞ்சும் வகையில் நேற்று பட்டப்பகலில் ரெயிலுக்குள் நடந்த சம்பவத்தைக் கண்ட பயணிகள் பயந்து அலறி ஓடினார்கள். தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பச்சையப்பன் கல்லூரி பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டது தெரியவந்தது.
இரண்டு கல்லூரி மாணவர்களும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். குரூப்பாக சேர்ந்து கொண்டு இதில் யார் பெரியவன்? நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பேருந்தில் மோதல்
கல்லூரி திறக்கப்பட்டதில் இருந்து இந்த மோதல் வலுத்து வந்தது. பஸ்சில் செல்லும் மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதிக் கொண்டனர். இப்போது ரெயிலில் பயணம் செய்யக்கூடிய மாணவர்கள் இடையே இந்த தாக்கம் ஏற்பட்டு மோதலாக உருவெடுத்துள்ளது.
12 பேர் கைது
இந்த மோதலில் ஈடுபட்டவர்களில் 12 பேர் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடிவருகிறார்கள்.
மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியாமல் இருக்கிறார்கள். பஸ்களில் அடாவடித்தனம் செய்தனர். இப்போது ரெயிலிலும் செய்ய துணிந்து விட்டனர். பொது சொத்திற்கு சேதம், பொது மக்கள் பாதிப்பு, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை போன்றவற்றை கருத்தில் கொண்டு மாணவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
படிக்க வேண்டிய மாணவர்கள் ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருவது பெற்றோர், ஆசிரியர்களை மட்டுமல்ல போலீசாரையும் கவலை அடையச் செய்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications