நா உயிரோடத் தான் இருக்கேன், அப்போ யாருக்குடா ‘இறுதிச்சடங்கு’ செஞ்சீங்க..
புவனேசுவரம்: ஒடிசாவில் கொலை செய்யப்பட்டதாகக் கருதி இன்ஜினியரிங் மாணவர் ஒருவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நிலையில், தற்போது அம்மாணவர் உயிருடன் திரும்பி உள்ளதால், இறுதிச்சடங்கு செய்யப்பட்ட உடல் யாருடையது என்ற குழப்பம் உண்டாகியுள்ளது.
ஒரிசா மாநிலம் காதிதா என்ற கிராமத்தை சேர்ந்த லோசன் காடிதா என்ற 19 வயது இன்ஜியரிங் மாணவரை கடந்த 8ந்தேதி முதல் காணவில்லை என போலீசில் புகாரளித்தார் அவரது தந்தை. இதற்கிடையே அவரது ஊர் அருகே உள்ள காட்டில் இருந்து அழுகிய நிலையில் உடல் ஒன்று கண்டெடுக்கப் பட்டது.
அது லோகனின் உடல் தான் என அவரது தந்தையும் அடையாளம் காட்ட, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உரிய இறுதி மரியாதைகளுக்குப் பின்னர் அந்த உடல் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனியில் லோசன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து கொலையாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், லோசனின் ஆறு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகையில், திடீரென வீட்டிற்கு வந்தார் லோசன். பூரி ஜெகநாதர் கோவில் திருவிழா பார்க்க சென்றதாகத் தெரிவித்துள்ளார் லோசன்.
லோசன் உயிரோடு திரும்பி வந்த நிலையில், அவரது குடும்பத்தாரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்ட உடல் யாருடையது என போலீசார் விசாரணைத் துவக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications