ஆன்லைனில் ஓட்டுப் போடும் முறை அவசியமாகிறது..: மோடி வலியுறுத்தல்

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய காலம் என்பது தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார்ந்தது. எந்த ஒரு தனிநபரும் அல்லது தனி அமைப்பும் இந்த விவகாரத்தில் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவரும் நாட்டின் இளைஞர்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.
சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக்கைப் போல யூ டியூப்பும் அற்புதமான ஒன்று. பல்வேறு முக்கிய சம்பவங்கள் இத்தகைய சமூக வலைதளங்களில்தான் உடனடியாக வெளியாகின்றன. அண்மையில் உத்தர்காண்ட் பேரழிவு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. காணாமல் போன உறவினர்களை மீட்பதில் இந்த சமூக வலைதளங்கள் பெரும்பங்கு வகித்தன.
இத்தகைய சமூக வலைதளங்களை எந்த ஒரு தனிநபரும் அமைப்பும் கட்டுப்படுத்திவிட முடியாது. அண்மையில்கூட மும்பை ஹோட்டலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக பில்லில் வாசகங்கள் இடம்பெற்ற சம்பவம் ஒரு செய்தித்தாளில் வந்தது. ஆனால் அந்த பிரச்சனை சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டது.
அதே நேரத்தில் சமூக வலைதளங்களை நாம் பயன்படுத்தும் போது நமது கலாசாரம் பண்பாடு ஆகியவற்றையும் மறந்துவிடக் கூடாது. எத்தனை நவீன வசதிகள் வந்தாலும் பெண்களை தெய்வமாக மதிப்பது நமது சமூகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப நமது தேர்தல் முறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அண்மையில் கூட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய எனது உரையில் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். நாட்டின் ஜனநாயக நடைமுறைகளில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் சமூக வலைதளங்களையும் பயன்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பம் என்பது விஸ்வரூபமாகிவிட்டது. இதனால் ஆன்லைனில் வாக்களிப்பது, வேட்பாளர்களை நிராகரிப்பது போன்றவற்றை உள்ளடக்கிய தேர்தல் சீருத்தங்கள் இப்போது அவசியமாகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications