இயற்கை எரிவாயு விலை உயர்வு ..மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: சர்ச்சைக்குரிய இயற்கை எரிவாயு விலை உயர்வு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலையை 4.2 டாலரில் இருந்து 8.4 டாலராக அண்மையில் மத்திய அரசு உயர்த்தியிருந்தது. ஆனால் அதிகாரிகளின் கருத்துகளை மீறி பெட்ரோலியத் துறை அமைச்சரே தன்னிச்சையாக இந்த விலை உயர்வு முடிவை எடுத்தார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அத்துடன் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா பொதுநலன் மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு இன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவை மூத்த பார்லிமென்ட் உறுப்பினர் தாக்கல் செய்திருக்கிறார். தொடக்க நிலையிலேயே இதை நிராகரித்துவிட முடியாது. இது தொடர்பாக மத்திய அரசு, ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை 4 வார காலத்துக்கு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 6-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications